Published : 24 Mar 2016 09:48 AM
Last Updated : 24 Mar 2016 09:48 AM
அடுத்த நிதி ஆண்டில் 16 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை யாகும் என்று அசோசேம் அமைப்பு கணித்திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் 10 கோடிக்கு மேல் ஸ்மார்ட்போன்கள் விற் பனையாகும் என்று கணித் திருக்கிறது.
ஸ்மார்ட்போன்களின் விலை குறைந்துவரும் சூழலால் வாங்குபவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. கடந்த 2012-13-ம் நிதி ஆண்டில் 4.4 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டன. ஆனால் அடுத்த மூன்று ஆண்டுகளில் விற்பனை இரு மடங்குக்கு மேல் உயர்ந் திருக்கிறது.
பெரும்பாலான வாடிக்கை யாளர்கள் கேமரா உள்ள ஸ்மார்ட் போன்களை வாங்குவற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு முக்கிய காரணமாக கேமிரா இருக்கிறது என்று அசோசேம் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் விற்பனை அதிகமாக இருப்பதால் டிஜிட்டல் கேமிரா விற்பனை கடந்த ஒரு வருடத்தில் 35 சதவீதம் சரிந்துள்ளது.
ஸ்மார்ட்போன் விற்பனையில் விலை குறைவான ஸ்மார்ட் போன்கள் அதிகம் விற்பனையா கின்றன. மொத்த ஸ்மார்ட்போன் விற்பனையில் 4,000 ரூபாய் முதல் ரூ.10,000 வரை உள்ள ஸ்மார்ட்போன்களின் பங்கு 78 சதவீதமாகும்.
அதேபோல டேப்லெட் விற் பனையில் 75 சதவீதம் முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட நகரங்களில் விற்பனையாகிறது. ஸ்மார்ட்போன், டேப்லெட் உள் ளிட்ட சாதனங்கள் மூலம் இணை யம் பயன்படுத்துவது அதிகரித் துள்ளதால் பர்சனல் கம்யூட்டர் மூலம் இணையம் பயன்படுத்து வது குறைந்துள்ளதாக அசோசேம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT