Published : 07 Aug 2015 10:20 AM
Last Updated : 07 Aug 2015 10:20 AM
கெய்ர்ன் இந்திய மற்றும் வேதாந்தா ஆகிய நிறுவனங்களின் இணைப்புக்கு எதிர்ப்பு தெரி விக்கப்போவதாக அவிவா நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அவிவா பி.எல்.சி. நிறுவனத்தின் துணை நிறுவனம்தான் அவிவா இன்ஷூரன்ஸ்.
இரு நிறுவனங்களும் இணை வதால் சிறு முதலீட்டாளர்களுக்கு நன்மை உண்டாகாது என்று அவிவா நிறுவனத்தின் தலைமையகமான லண்டனில் இருந்து வெளி யாகும் செய்திக்குறிப்பு தெரிவிக் கிறது.
இந்த இணைப்பு சந்தர்ப்ப வசமானது. கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தின் முதலீட்டாளர் களுக்கு இதனால் பலன் கிடை யாது.
கெய்ர்ன் நிறுவனத்தை அந்த நிறுவனம் குறைவாக மதிப் பிட்டுள்ளது.
வேதாந்தா நிறுவனத்துக்கு அதிகக் கடன் உள்ளதால் இந்த இணைப்பு நடக்கும் பட்சத்தில் கெய்ர்ன் நிறுவனத்தில் இருக்கும் உபரி தொகை, வேதாந்தா குழுமத்தால் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது என்று அவிவா கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT