Published : 08 Dec 2023 05:58 AM
Last Updated : 08 Dec 2023 05:58 AM

விமானப் பயணிகளின் எண்ணிக்கை 14.5 கோடியாக உயர்வு!

புதுடெல்லி: மக்களவையில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்கு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அளித்த பதிலில் கூறியி ருப்பதாவது:

கரோனா காலகட்டத்தில் விமானத் துறை மிகுந்த பாதிப்பைச் சந்தித்தது. விமான எரிபொருள் விலை மூன்று மடங்கு உயர்ந்தது. கடந்த 3 ஆண்டுகளில் விமான நிறுவனங்களுக்கு ரூ.1.30 லட்சம் கோடி வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், விமான கட்டணம் பெரிய அளவில் உயர்த்தப்படவில்லை. ரயிலில் முதல் வகுப்பு ஏசி கட்டணத்துக்கு நிகராக விமானக் கட்டணம் உள்ளது.

இந்தச் சூழலில் கடந்த 9 ஆண்டுகளில் விமானங்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2014-ல் 6 கோடியாக இருந்த விமானப் பயணிகளின் எண்ணிக்கை நடப்பு ஆண்டில் 14.5 கோடியாக உயர்ந்துள்ளது. 2030-ல் இந்த எண்ணிக்கை 42 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.் இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x