தமிழ் இனிது - 3: சென்னைப் பேச்சில் சங்கத் தமிழ்

By நா.முத்துநிலவன்

சங்கத் தமிழில் ‘அலர்' எனும் சொல்லுக்கு ‘மலர்ந்த பூ' என்பது பொருள். காதலரிடையே பூத்து மலர்ந்திருக்கும் காதலைப் பற்றிப் பேசுவதை ‘அலர் தூற்றுதல்' என்று சங்க இலக்கியம் சொல்லும். ‘சின்னஞ் சிறுசுங்க சந்திச்சிட்டுப் போறாங்க, நீங்க ஏன்பா சம்பந்தமில்லாம அதுகளத் தூத்துறீங்க' என்பது போல, ‘அலர் தூற்றுதல்' எனும் சொல்லின் அழகைக் கவனியுங்கள். சிலர் தமக்குள் மறைவாகப் பேசிக் கொள்வதை ‘அம்பல்' என்பார்கள் (இதுவே பிறகு அம்பலம் ஏறியிருக்க வேண்டும்). சிலர் அறிந்த ரகசியமான அம்பல், பலர் அறியப் பகிரப்பட்டால், அலராகி ‘ஊர் அறிந்த ரகசியம்' ஆகிவிடும். அலர்அம்பல் – அலம்பல் (துணியை நீரில் அலசுவது) என வரும்.

பறை என்பது ஊரறியச் சொல்வது. ஈழத் தமிழிலும் மலையாளத்திலும் பறை என்றால் பேசுதல்தான். “என்னடீ? ஊரெல்லாம் போயி பறையடிச்சிட்டு வந்திட்டியில்ல”, இப்படிப் போட்டு உடைப்பதே அலர்ப்பறை! இதுதான் இப்போது மதுரைத் தமிழில் ‘அலப்பர’ ஆகிவிட்டது! அலர்ப்பறை எனும் சங்கத் தமிழே ‘அலப்பர’ எனும் மதுரைத் தமிழானது. ‘அலப்பரை’ என்று (ரை - இடையினம் இட்டு) க்ரியாவின் ‘தற்காலத் தமிழ் அகராதி' சொல்கிறது,

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

இந்தியா

23 mins ago

விளையாட்டு

36 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

வணிகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

உலகம்

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்