Published : 27 Dec 2016 10:46 AM
Last Updated : 27 Dec 2016 10:46 AM
தைவானுடன் பதற்றம் அதிகரித் துள்ள நிலையில், சீனாவின் விமானம் தாங்கி உட்பட 6 போர்க் கப்பல்கள் தென்சீனக் கடல் பகுதிக்கு சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது. அதை சீனாவுடன் இணைக்கவும் முயற்சி மேற்கொண்டு வருகி றது. இந்நிலையில், அமெரிக்கா வின் புதிய அதிபராக தேர்ந்தெடுக் கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப், சமீபத்தில் தைவான் அதிபர் சாய் இங்-வென் உடன் தொலை பேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
இதனால் தைவான், அமெரிக்கா மீது ஆத்திரமடைந்துள்ள சீனா, தனது ராணுவ வலிமையை பறைசாற்றும் வகையில் தென்சீன கடல் பகுதியில் கடற்படை பயிற்சியில் ஈடுபட திட்டமிட்டுள் ளதாகக் கூறப்படுகிறது.
இதற்காக, லியோனிங் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல் மற்றும் 5 போர்க்கப்பல்களைத் தென்சீன கடல் பகுதிக்கு சீனா அனுப்பி வைத்துள்ளது. இந்தக் கப்பல்கள் தைவான் பிலிப்பைன்ஸ் இடையிலான பஷி சேனல் வழி யாக கடந்து சென்றதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித் துள்ளது.
இதையடுத்து அந்தக் கப்பல் களை உன்னிப்பாக கவனித்து வருவதாக அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேநேரம், சீன கப்பல்களின் செயல்பாட்டை கண்காணிக்கும் பணியில் எப்-16 ரக போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை தைவான் அரசு ஈடுபடுத்தி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, முதன்முறை யாக பசிபிக் பகுதியில் பயிற்சியில் ஈடுபடுவதற்காக விமானம் தாங்கி கப்பல் அங்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, கிழக்கு சீன கடல் பகுதியில் கடந்த சனிக்கிழமை 8 சீன போர்க் கப்பல்கள் தென் பட்டதை தங்கள் நாட்டு போர்க் கப்பல்கள் மூலம் அடையாளம் காணப்பட்டதாக ஜப்பான் பாது காப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT