Published : 27 Dec 2016 10:57 AM
Last Updated : 27 Dec 2016 10:57 AM

பிலிப்பைன்ஸை சூறையாடியது புயல்

பிலிப்பைன்ஸ் நாட்டின் பெரும் பகுதியை நோக்-டென் என்று பெயரிடப்பட்ட புயல் சூறையாடியுள்ளது.

பிலிப்பைன்ஸின் தென்கிழக்குப் பகுதியான அல்பே மாகாணத்தை நோக்-டென் புயல் நேற்று முன்தினம் தாக்கியது. மணிக்கு 148 கி.மீ. முதல் 185 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதன்காரணமாக மாபினி நகர கடல் பகுதியில் 2 சரக்கு கப்பல்கள் தரைதட்டின.

சாலையில் சென்று கொண் டிருந்த லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் தலைகீழாக சரிந்தன. வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. ஆயிரக்கணக்கான மரங் கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் முறிந்தன. அல்பே மாகாணம் முழுவதும் பலத்த மழை பெய்து வெள்ளத்தில் மிதக்கிறது.

இந்தப் புயல் நேற்று தலைநகர் மணிலாவில் கரையைக் கடந்து தென்சீனக் கடல் நோக்கி நகர்ந் தது. இதனால் மணிலா நகரின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. புயல் தாக்கிய பகுதி முழுவதும் இருளில் மூழ்கி யுள்ளது.

பல்வேறு சம்பவங்களில் இது வரை 10-க்கும் மேற்பட்டோர் உயிரி ழந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. பல ஆயிரம் கோடிக்கு பொருள் இழப்பு ஏற்பட் டிருக்கும் என்று கணக்கிடப்பட் டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் ஏற்பட்ட புயல் காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் 7300 பேர் உயிரிழந்தனர். எனவே இந்த முறை போதிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப் பட்டுள்ளது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x