Published : 21 Oct 2016 10:40 AM
Last Updated : 21 Oct 2016 10:40 AM
சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் நபீஸ் ஜகாரியா கூறியதாவது: சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்யப்போவதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்த விவகாரத்தை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தை இந்தியா மீறும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுப்போம்.
காஷ்மீர் விவகாரம் குறித்து சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் எடுத்துரைத்து வருகிறது. இந்த விவகாரத்தில் எங்களின் கருத்தை உலக நாடுகள் ஆமோதித்து வருகின்றன. காஷ்மீர் பிரச்சினையில் அமெரிக்கா சமரசத்தில் ஈடுபட வேண்டும் என்று விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT