Published : 01 May 2024 08:05 AM
Last Updated : 01 May 2024 08:05 AM

நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து இங்கிலாந்து வீரர்கள் வெளியேறுகின்றனர்

லண்டன்: டி20 உலகக் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம் பெற்றுள்ள ஜாஸ் பட்லர், மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோ, சேம் கரண், லியாம் லிவிங்ஸ்டன், பில் சால்ட், வில் ஜேக்ஸ், ரீஸ் டாப்லி ஆகியோர் நடப்பு ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளுக்காக விளையாடி வருகின்றனர்.

உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து உள்நாட்டில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி 20 தொடரில் விளையாடுகிறது. இதில் பங்கேற்கும் வகையில் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து வீரர்கள் வெளியேறி தாயகம் திரும்புவார்கள் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதனால் இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரின் இறுதிக்கட்ட பகுதியில் கலந்து கொள்ளமாட்டார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x