Last Updated : 25 Oct, 2016 12:30 PM

 

Published : 25 Oct 2016 12:30 PM
Last Updated : 25 Oct 2016 12:30 PM

கென்யாவில் தீவிரவாதிகள் தாக்குதல்: 12 பேர் பலி

கென்யாவில் மண்டேரா பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புத் தாக்குதலில் 12 பேர் பலியாகினர்.

இந்தத் தாக்குதல் குறித்து கென்யா போலீஸார் கூறும்போது, "கென்யாவின் வடக்கிழக்கின் விடுதி பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளில் வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. கட்டிட இடிப்பாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்க, மீட்புப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது" என்றார்.

சோமாலியா மற்றும் எத்தியோப்பியா எல்லையை ஒட்டியுள்ள மண்டேரா நகரில் நடந்த இத்தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x