Published : 02 Apr 2016 09:43 AM
Last Updated : 02 Apr 2016 09:43 AM
சர்வதேச விதிமுறைகளை மதிக் காத வடகொரியா, மீண்டும் ஏவு கணை சோதனை நடத்தி உள்ளது. இதற்கு தென் கொரியா உட்பட உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஐ.நா. மற்றும் சர்வதேச ஒப்பந் தங்கள் எதையும் பின்பற்றாமல், வடகொரிய அரசு தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. அணு ஆயு தங்கள் பரிசோதனை, ஏவுகணை சோதனைகளை நடத்தி தொடர்ந்து உலக நாடுகளை அச்சுறுத்தி வரு கிறது. குறிப்பாக தென் கொரியா மற்றும் அமெரிக்காவை அழிப் போம் என்று வடகொரிய அதிபர் பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்து வருகிறார்.
அதற்கேற்ப கடந்த ஜனவரி 6-ம் தேதி வடகொரியா 4-வது முறையாக அணு ஆயுத சோதனை நடத்தியது. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்த பரபரப்பான சூழ்நிலை யில், வடகொரியா நேற்று சான் டோக் பகுதியில் இருந்து அதி காலை 3.45 மணிக்கு மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது என்று தென் கொரிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தகவல் வெளி யிட்டது. ஆனால், ஏவுகணையின் திறன் குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
வடகொரியா அரசு ஏவுகணை சோதனை எதுவும் நடத்த கூடாது என்று ஐ.நா. தடை விதித்துள்ளது. இதை மீறி ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், பல நாடுகள் வடகொரியா மீது பொருளாதார தடையும் விதித்துள்ளன.
3 நாடுகள் கூட்டணி
வடகொரியாவின் அணு ஆயுத மிரட்டலில் இருந்து பாதுகாத்து கொள்ள ஒற்றுமையாக செயல்படுவது என தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.
வாஷிங்டனில் அணு ஆயுத பாதுகாப்பு மாநாடு நேற்று நிறைவடைந்தது. இந்த மாநாட்டில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தென்கொரிய அதிபர் பார்க் ஜியூன் ஹை, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோருடன் அமெரிக்க அதிபர் ஒபாமா நீண்ட ஆலோசனை நடத்தினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த ஒபாமா, ‘‘வடகொரியாவின் அச் சுறுத்தலை முறியடிக்க சர்வதேச நாடுகள் கவனமுடன் செயல்பட வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT