Published : 10 Dec 2015 09:50 AM
Last Updated : 10 Dec 2015 09:50 AM
அமெரிக்காவில் சீக்கிய குருத்வாரா சுவர்களில் ஐஎஸ் அமைப்புக்கு எதிரான வாசகங்களை விஷமிகள் சிலர் எழுதி வைத்துள்ளனர். கலிபோர்னியாவில் முஸ்லிம் தம்பதி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில் 14 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
லாஸ் ஏஞ்சலீஸில் உள்ள சிங் சாபாஸ் குருத்வாரா சுவர் மற்றும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றின் மீதும் ஐஎஸ் அமைப்புக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.
இதுதொடர்பாக பியூனா பார்க் காவல் நிலையத்தில் குருத்வாரா நிர்வாகிகள் புகார் செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்த வெள்ளை மாளிகை, உள்நாட்டு பாதுகாப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT