Last Updated : 30 Nov, 2015 01:26 PM

 

Published : 30 Nov 2015 01:26 PM
Last Updated : 30 Nov 2015 01:26 PM

இந்தோனேசிய படகு மூழ்கி விபத்து: அனைத்து பயணிகளும் மீட்பு

சிங்கப்பூர் அருகே சென்று கொண்டிருந்த இந்தோனேசிய பயணிகள் படகு விபத்துக்குள்ளானது. இதில் சிக்கிய அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்று கொண்டிருந்த பயணிகள் படகு கடலில் மிதந்த அடையாளம் தெரியாத பொருளின் மீது மோதி நேற்று இரவு (ஞாயிற்றுக்கிழமை) விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து குறித்து சிங்கப்பூர் கடல்வழி போக்குவரத்து மற்றும் துறைமுக ஆணையத்துக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது.

சிங்கப்பூரிலிருந்து 40 நிமிட பயண தூரத்தில் இருக்கும் பாடாம் தீவு அருகே இந்த விபத்து நேரிட்டது. விபத்து நடந்த பகுதியிலிருந்து 90 பயணிகளும் 7 ஊழியர்களும் மீட்கப்பட்டு நோகஸ்புரா முனையத்துக்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டனர்.

இந்த விபத்தில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x