Published : 23 Dec 2020 08:35 PM
Last Updated : 23 Dec 2020 08:35 PM
பூடானில் புதிதாக கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் அங்கு ஒரு வாரத்துக்கு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பூடான் அரசு தரப்பில், “ பூடானில் புதிதாக 26 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூரில் ஏற்பட்ட தொற்று காரணமாக மீண்டும் கரோனா பரவத் தொடங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஒரு வாரத்துக்கு ஊரடங்கு விதிக்கப்படுகிறது. கடந்த ஊரடங்கைவிட இம்முறை நாம் கவனமாக இருக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 6.5 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை அனுமதித்து வருகின்றன.
பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். பொருளாதாரமும் மெல்ல மீட்டெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. அதுவும் பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனாவால் உலக நாடுகளை மீண்டும் பீதி தொற்றிக் கொண்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT