Published : 18 Dec 2020 12:38 PM
Last Updated : 18 Dec 2020 12:38 PM

தென் ஆப்பிரிக்காவில் கரோனா பாதிப்பு 8,92,813 ஆக அதிகரிப்பு

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 9, 126 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தபட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை தரப்பில், “ தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 9.126 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,92,813 ஆக அதிகரித்துள்ளது.மேலும் நேற்று மட்டும் 184 பேர் கரோனாவுக்கு பலியாக நாட்டில் இதுவரை கரோனாவுக்கு 24,011 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கரோனா வைரஸ் காரணமாக குழந்தைகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக யுனிசெஃப் முன்னரே எச்சரிக்கை விடுத்தது.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் ஆகிய நாடுகள் கரோனா தடுப்பு மருந்தை மக்களுக்கு செலுத்தும் பணியில் இறங்கி உள்ளனர்.

உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 6.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x