Last Updated : 18 Dec, 2020 11:43 AM

 

Published : 18 Dec 2020 11:43 AM
Last Updated : 18 Dec 2020 11:43 AM

புதுச்சேரியில் புதிதாக 50 பேருக்கு கரோனா தொற்று; மேலும் ஒருவர் உயிரிழப்பு: 4.50 லட்சத்தை நெருங்கிய பரிசோதனை எண்ணிக்கை  

புதுச்சேரியில் இன்று புதிதாக 50 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். பரிசோதனை எண்ணிக்கை 4.50 லட்சத்தை நெருங்கியுள்ளது.

இது குறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (டிச. 18) தெரிவித்திருப்பதாவது:

"புதுச்சேரி மாநிலத்தில் 2,913 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 21 பேருக்கும், காரைக்காலில் 8 பேருக்கும், ஏனாமில் 2 பேருக்கும், மாஹேவில் 19 பேருக்கும் என மொத்தம் 50 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார்: கோப்புப்படம்

மேலும், புதுச்சேரி லாஸ்பேட்டை மெயின்ரோட்டைச் சேர்ந்த 78 வயது முதியவர் ஜிப்மரில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 623 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.65 சதவீதமாக உள்ளது.

இதுவரை புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 37 ஆயிரத்து 670 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் தற்போது மருத்துவமனைகளில் 199 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 117 பேரும் என 316 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று புதுச்சேரியில் 13 பேர், காரைக்காலில் 2 பேர், ஏனாமில் 2 பேர், மாஹேவில் 21 பேர் என 38 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 731 (97.51 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 4 லட்சத்து 47 ஆயிரத்து 588 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் பரிசோதனை எண்ணிக்கை 4.50 லட்சத்தை நெருங்கியுள்ளது. இவற்றில் 4 லட்சத்து 55 ஆயிரத்து 62 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது".

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x