Published : 09 Nov 2020 08:31 PM
Last Updated : 09 Nov 2020 08:31 PM

இத்தாலியில் தேசிய அளவில் ஊரடங்கை அமல்படுத்த மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தல்

கரோனா இரண்டாம் அலை தொடங்கியுள்ளதால் நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்துமாறு இத்தாலி அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து இத்தாலி மருத்துவ நிபுணர்கள் குழு கூறுகையில், “இத்தாலியில் கடந்த சில நாட்களாகவே கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 32,616 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 331 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். இத்தாலியில் கரோனா பரவல் இரண்டாம் கட்டம் தொடங்க இருப்பதால், நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

மேலும், பொதுமக்கள் தேவையற்ற பயணத்தைத் தவிர்க்குமாறும் மருத்துவ நிபுணர்கள் குழு அறிவுறுத்தியுள்ளது.

இத்தாலியில் இவ்வாண்டின் தொடக்கத்தில் கரோனா பரவல் தீவிரமாக இருந்தது. இதனால் அங்கு ஊரடங்கு பரந்த அளவில் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பொருளாதாரம் சரிந்தது. எனவே, இம்முறை நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 3 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x