Published : 19 Feb 2020 11:55 AM
Last Updated : 19 Feb 2020 11:55 AM
சீனாவின் வூஹான் மாகாணத்தின் உள்ள மருத்துவமனை ஒன்றின் தலைமை இயக்குநர், கரோனா வைரஸ் பாதிப்பால் நேற்று உயிரிழந்தார்.
வூசாங் மருத்துவமனையின் தலைமை இயக்குநராக இருந்தவர் லியோ ஜிமிங் (51). மருத்துவரான இவர் கோவிட்- 19 (கரோனா வைரஸ்) காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
தொடர் சிகிச்சையில் இருந்த லியோ, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவே வூசாங் மருத்துவமனையை லியோ அர்ப்பணித்திருந்தார்.
லியோவின் மரணம் குறித்து வூஹானின் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறும்போது, “தவிர்க்க முடியாமல் லியோ கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அவர் மரணமடைந்தார். அவரைக் காப்பாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன” என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, சீனாவில் செவ்வாய்க்கிழமையன்று கோவிட்-19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு 136 பேர் பலியாயினர். இதனைத் தொடர்ந்து கரோனா வைரஸுக்கு சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 2004 ஆக அதிகரித்துள்ளது.
சுமார் 74,185 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வருகின்றனர். இவர்களில் 11,977 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 14,376 பேர் குணமடைந்து மருத்துவமனை திரும்பியுள்ளனர்.
தவறவீடாதீர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT