Published : 02 Apr 2015 11:14 AM
Last Updated : 02 Apr 2015 11:14 AM
பாக்டீரியாவால் ஏற்படும் பல்வேறு நோய்களை எதிர்த்து போரிடும் ஆற்றல் பேரீட்சை சாறுக்கு (சிரப்) உள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரிட்டனில் உள்ள கார்டிஃப் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹேஜர் தலெப் என்ற ஆய்வு மாணவரின் ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
பஸ்ரா மற்றும் தெற்கு இராக்கில் பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்படும் பேரீட்சை சாறைக்கொண்டு இம்மாணவர் ஆய்வு மேற்கொண்டார். இதில் மனுகா மலர்த் தேனை விட பேரீட்சை சாற்றில் கிருமி நாசினி மூலக்கூறுகள் அதிகம் இருப்பதாகவும் இதனால் இத்தேனை விட பேரீட்சை சாறு பாக்டீரியா வளர்ச்சியை விரைவாக தடுக்கும் என்றும் இவர் கூறுகிறார்.
இந்தப் பல்கலைக்கழகத்தின் முன்னணி ஆய்வாளரான டாக்டர் அரா கனேகனியன் கூறும்போது, “பாக்டீரியாவை எதிர்த்து போரிடுவதன் மூலம் பேரீட்சை சாறு ஆரோக்கியம் தரக்கூடியது என ஆய்வகப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
பேரீட்சை சாற்றில் கிருமி நாசினி மூலக்கூறு கள் இருப்பதே இதற்கு காரணம். என்றாலும் ஆய்வு இன்னும் முழுமை அடையாததால், காயங் களுக்கு பேரீட்சை சாறை பயன் படுத்தக் கூடாது என மக்களை எச் சரிக்கிறோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT