Last Updated : 26 Apr, 2015 11:52 AM

 

Published : 26 Apr 2015 11:52 AM
Last Updated : 26 Apr 2015 11:52 AM

அமெரிக்க தாக்குதலில் அல் காய்தா முக்கிய தலைவர் பலி: இந்தியாவை தாக்க திட்டமிட்டவர்

பாகிஸ்தானில் அமெரிக்க ராணுவம் நடத்திய ஆள் இல்லாத விமான தாக்குதலில் அல் காய்தா தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர் அயுமான் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டார். இவர் இந்திய துணைக் கண்டத்தில் தீவிரவாத தாக்குதல்களை நடத்தும் பிரிவின் தலைவராக செயல்பட்டு வந்தார். கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் இவர் கொல்லப்பட்டார்.

அப்போது நடைபெற்ற தாக்குதலில் அல் காய்தா தீவிரவாதிகள் பிணைக் கைதியாக பிடித்து வைத்திருந்த அமெரிக்கர் ஒருவரும் கொல்லப்பட்டார். எனவே இது தொடர்பான செய்தி உடனடியாக வெளியிடப்படவில்லை. எனினும் இப்போது அமெரிக்க பத்திரிகைகள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் எல்லையில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா கடந்த ஓராண்டாக ஆள் இல்லாத விமானங்கள் மூலம் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x