Published : 10 Aug 2017 10:24 AM
Last Updated : 10 Aug 2017 10:24 AM
சீனாவின் சிசுவான் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 7 ஆக பதிவானது. இதில் இதுவரை 25 பேர் பலியாகி உள்ளனர்.
250-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களில் 40 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. அந்த மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சிசுவான் மாகாணத்தில் தொடர்ச்சியாக நிலஅதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளுக்கு செல்ல அஞ்சி பூங்காக்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
ஒவ்வொரு பூங்காவிலும் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்திருப்பதாகவும் அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT