Last Updated : 09 Aug, 2017 04:19 PM

 

Published : 09 Aug 2017 04:19 PM
Last Updated : 09 Aug 2017 04:19 PM

ஆப்கன்: தாலிபன்கள் பிடியிலிருந்து பொதுமக்கள் 235 பேர் விடுவிப்பு

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் கட்டுப்பாட்டிலிருந்த 235 கிராம மக்கள் விடுவிக்கப்பட்டனர்.

ஆப்கானில் தாலிபன்கள் கட்டுப்பாட்டிலிருந்த பொதுமக்கள் 235 பேரை தாலிபன்கள் விடுவித்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஆப்கன் கவர்னர் ஒருவர் கூறும்போது, ”ஐந்து நாட்களுக்கு முன்னர் ஆப்கனின் வடக்கு பகுதி மாகாணமான சரி புல் நகரத்திலிருந்து தாலிபன்கள் கட்டுப்பாட்டிலிருந்த 235 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் பிணைய கைதிகளாக தாலிபன்களிடம் உள்ளனர்”என்றார்.

தாலிபன்களின் கட்டுப்பாட்டு பகுதியை கைப்பற்ற ஆப்கன் படைகள் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றன, இதன் காரணமாக தாலிபன்கள் அவர்கள் பகுதியிலுள்ள பொதுமக்களை பிணைய கைதிகளாக பிடித்து கொண்டு அரசுப் படைக்கு எதிராக பொதுமக்களை கவசமாக பயன்படுத்தி வருகின்றனர்.

ஆப்கன் அரசின் முன்னேற்ற நடவடிக்கையின் காரணமாக சயித் மாவட்டத்தில் தாலிபன்கள் கட்டுப்பாட்டிருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 52 பேர் கொல்லப்பட்டனர்.

எனினும் தொடர்ந்து ஆப்கன் அரசுப் படைகள் தொடர்ந்து தாலிபன்களின் பகுதியை கைப்பற்ற சண்டையிட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x