Published : 09 Aug 2017 10:07 AM
Last Updated : 09 Aug 2017 10:07 AM
சீனாவின் தென்மேற்கு பிராந்தியமான சிசுவான் பகுதியில் நேற்று இரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானதாக சீன நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது.
உள்ளூர் நேரப்படி இரவு 9.19 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன அரசின் ஜின்ஹூவா செய்தி நிறுவனம் தெரிவித்தது. பிராந்திய தலைநகரான செங்குடுவில் இருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில், 20 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்றும், ஆயிரக் கணக்கானோர் காயமடைந்திருக்கலாம் எனவும் பேரிடர் தடுப்புக்கான சீன தேசிய ஆணையம் தெரிவித்தது.
எனினும், 5 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததையும், 63 பேர் காயமடைந்ததையும் ஜின்ஹுவா செய்தி நிறுவனம் உறுதி செய்தது. இதில் 30 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுமார் 106 நில அதிர்வுகள் உணரப்பட்டன. 1.3 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT