Published : 09 Aug 2017 08:47 AM
Last Updated : 09 Aug 2017 08:47 AM

பாகிஸ்தானில் தீவிரவாதி கட்சி தொடங்கினார்

மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயீத் புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ளார்.

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி மும்பையின் பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் உயிரிழந்தனர். 600-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கில் பாகிஸ்தானின் ஜமாத் உத்-தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். சர்வதேச நிர்பந்தம் காரணமாக பாகிஸ்தான் அரசு கடந்த 6 மாதங்களாக அவரை வீட்டுக் காவலில் வைத்துள்ளது. அவரது அமைப்புக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜமாத் உத் தவாவுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் ஹபீஸ் சயீத் தற்போது ‘மில்லி முஸ்லிம் லீக்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். சயீத் வீட்டுக் காவலில் இருப்பதால் அவரது வலதுகரமாகக் கருதப்படும் சைபுல்லா காலித், கட்சி தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை லாகூரில் நேற்றுமுன்தினம் வெளியிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x