Last Updated : 17 Apr, 2017 07:12 PM

 

Published : 17 Apr 2017 07:12 PM
Last Updated : 17 Apr 2017 07:12 PM

எங்களை மட்டுப்படுத்த தலாய் லாமாவை இந்தியா பயன்படுத்தக் கூடாது: சீனா

இந்தியா எங்களை மட்டுப்படுத்த தலாய் லாமாவை பயன்படுத்தக் கூடாது என்று சீனா கூறியுள்ளது.

தலாய் லாமா அருணாச்சல பிரதேசத்துக்கு வருகை தந்தது குறித்து இன்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவித்த சீனா "தலாய்லாமாவின் அருணாச்சல பிரதேச வருகை இந்திய - சீன உறவில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் லூ காங்க் கூறும்போது, "தலாய் லாமாவின் அருணாச்சல வருகை இந்திய - சீன உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா திபெத் தொடர்பான பிரச்சனைகளை அர்ப்பணிப்புடன் கண்காணிக்க வேண்டும். மேலும் சீனாவை மட்டுப்படுத்த தலாய்லாமாவை பயன்படுத்தக் கூடாது. இந்த ஒரு வழி மட்டுமே இந்தியா - சீனா இடையே நிகழும் எல்லை தொடர்பான கேள்விகளை தீர்ப்பதற்கு சுமூகமாக சூழ்நிலையை ஏற்படுத்த முடியும்" என்றார்.

முன்னதாக அருணாச்சலப் பிரதேசத்திற்கு பவுத்தத் துறவி தலாய் லாமா வருகை தந்ததற்கு இந்தியாவை கடுமையாக சாடிவந்தது சீனா. குறிப்பாக சீனா தெற்கு திபெத் என்று கருதும் தவாங் பகுதிக்கு தலாய்லாமா வருகை தந்ததை சீனா கடுமையாக எதிர்த்தது.

இந்தியாவின் சட்டவிரோத ஆட்சியில் தெற்கு திபெத் மக்கள் பல சிரமங்களையும் பல்வேறு பாகுபாடுகளையும் அனுபவித்து வருகின்றனர். இதனால் சீனாவுடன் இணைய விரும்புகின்றனர் என்று சீன செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x