Published : 21 Apr 2017 10:16 AM
Last Updated : 21 Apr 2017 10:16 AM
மகாத்மா காந்தி உருவப் படத்துடன் வெளியிடப்பட்ட மிக அரிய 4 தபால் தலைகள் இங்கிலாந்தில் ஏலம் விடப்பட்டுள்ளன. அவற்றை ரூ.4 கோடியே 15 லட்சம் கொடுத்து ஒருவர் வாங்கி உள்ளார்.
இந்தியாவின் பழமைவாய்ந்த தபால் தலைகளுக்கு உலகளவில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. அரிய தபால் தலைகளை ஏலம் விடும் போது, அதிக விலை கொடுத்து வாங்க தபால் தலை சேகரிப்பாளர்கள் பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில், கடந்த 1948-ம் ஆண்டு மகாத்மா காந்தி உருவப் படத்துடன் வெளியிடப்பட்ட 4 தபால் தலைகள் இங்கிலாந்தில் சமீபத்தில் ஏலம் விடப்பட்டன.
வழக்கமாக ஒற்றை தபால் தலையே ஏலத்துக்கு வந்துள் ளது. அரிய பொருட்கள் சேகரிப் பாளர்களிடமும் ஒற்றை தபால் தலைகளே உள்ளன. ஆனால், இந்த 4 தபால் தலைகளும் ஒன்றாக இணைந்த நிலையில் வரிசையாக உள்ளன. இதுபோல் ஒன்றாக இருக்கும் 4 தபால் தலைகள் ஏலம் விடப்படுவது இதுவே முதல்முறை. எனவே, இந்த தபால் தலைகள் தனிசிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
காந்தியின் உருவப்படத்துடன், ‘சர்வீஸ்’ என்று ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டு தலா 10 ரூபாய் மதிப்புள்ள இந்த 4 தபால் தலை களையும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தபால் தலை சேகரிப்பாளர் ஒருவர், ரூ. 4 கோடியே 15 லட்சம் (5 லட்சம் பவுண்ட்) கொடுத்து ஏலம் எடுத்துள்ளார்.
இதுபோன்ற தபால் தலைகள் உலகளவில் இப்போது 13 மட்டுமே உள்ளன. இந்திய தபால் தலைகள் அதிகபட்ச ஏலத்தொகைக்கு விற்கப்பட்டதும் இதுவே முதல்முறை என்று இங்கிலாந்தில் அரிய தபால் தலைகளை விற்கும் ‘ஸ்டான்லி கிப்ஸன்’ என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT