Published : 22 Jun 2016 10:29 AM
Last Updated : 22 Jun 2016 10:29 AM
இங்கிலாந்து முதல் உலகப் போரில் அடியெடுத்து வைத்த நூற்றாண்டு விழா 2014, ஆகஸ்டில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி போரில் பங்கேற்று வீரதீர செயல்கள் புரிந்த பிற நாடுகளைச் சேர்ந்த 175க்கும் மேற்பட்ட வீரர்களை கவுரவப் படுத்தும் வகையில், இங்கிலாந் தின் மிக உயரிய வீரதீர ‘விக்டோரியா கிராஸ்’ விருது வழங்கப்பட்டது. அவர்களில் 6 பேர் பிரிக்கப்படாத இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
அவர்களது உணர்ச்சிமிகு கதைகளை விவரிக்கும் புதிய டிஜிட்டல் ஆவணத்தை அந்நாட்டு அரசு நேற்று வெளியிட்டது.
அந்த டிஜிட்டல் ஆவணத்தில் பஞ்சாப்பின் ரிசால்தர் பத்லு சிங், உ.பி.யின் சிப்பாய் சாட்டா சிங், தற்போதைய உத்தராகண்டின் நாயக் தர்வன் சிங் நெகி மற்றும் கபார் சிங் நெகி, ராஜஸ்தானின் தபாதார் கோவிந்த் சிங், இமாச்சலின் நாயக் லாலா ஆகியோரது சுயசரிதைகள் இடம் பெற்றுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT