Published : 21 Jun 2016 03:35 PM
Last Updated : 21 Jun 2016 03:35 PM
அமெரிக்க தொழில்நுட்ப உதவியின்றியே சீனா அதிவேக சூப்பர் கணினியைத் தயாரித்து அசத்தியுள்ளது.
உள்நாட்டிலேயே தயாரித்த மைக்ரோசிப்களை வைத்தே இந்த அதிவேக சூப்பர் கணினி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கணினிக்கு தி சன்வே தாய்ஹூ லைட் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த புதிய நம்பர் 1 சூப்பர் கணினி விநாடிக்கு 93 குவாட்ரில்லியன் கணக்கீடுகளைச் செய்யுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள அதிவேக கணியை விட இது 5 மடங்கு வேகம் கொண்டது.
இதற்கு முன்னால் தயாரிக்கப்பட்ட சூப்பர் கம்ப்யூட்டர் அமெரிக்காவின் இண்டெல் நிறுவன சிப்களினால் தயாரிக்கப்பட்டதாகும்.
தற்போது தயாரிக்கப்பட்டுள்ள சன்வே தாய்ஹூ லைட் கணினி ‘கிளைமேட் மாடலிங் அண்ட் லயிஃப் சயன்ஸ்’ ஆய்வுக்குப் பயன்படுத்தப்படவுள்ளது.
சூப்பர் கம்ப்யூட்டர்கள் தயாரிப்பில் சீனா முதலிடம் வகிக்க, அமெரிக்கா 2-ம் இடம் வகிக்கிறது. சீனா 2 அதிவேக கம்ப்யூட்டர்களை வைத்துள்ளது, அமெரிக்கா 4 அதிவேக கணினிகளை வைத்துள்ளது.
உயர் தொழில்நுட்பத்தில் மைல்கல்லை எட்டுவதற்காக சீனா பெருமளவு பணத்தை முதலீடு செய்து புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT