Published : 29 Sep 2014 11:50 AM
Last Updated : 29 Sep 2014 11:50 AM

செவ்வாயில் முதல் துளையிட்டது மார்ஸ் ரோவர் க்யூரியாஸிட்டி

செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ள மார்ஸ் ரோவர் க்யூரியாஸிட்டி, அங்குள்ள மவுன்ட் ஷார்பில் ஆய்வுக்காக முதல் துளையிட்டது.

ரோவர் விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த டிரில்லர் 2.6 அங்குல அளவு ஆழத்திற்கு ஒரு துளையிட்டு அதிலிருந்து சில துகள்களை ஆய்வுக்காக எடுத்துள்ளது.

இது குறித்து நாசாவின் ஜெட் புரொபல்சன் ஆய்வக விஞ்ஞானி அஸ்வின் வாசுதேவ் கூறுகையில்: "மவுன்ட் ஷார்ப்பில் இருக்கும் பாறைகளின் தன்மையை ஆராயவிருக்கிறோம். மார்ஸ் ரோவர் க்யூரியாஸிட்டி அதற்கான மாதிரிகளை சேகரித்துள்ளது" என்றார்.

செவ்வாய் கிரக ஆய்வுக்காக, அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா 'மார்ஸ் ரோவர் கியூரியாஸிட்டி' விண்கலத்தை கடந்த 2012-ம் ஆண்டு அனுப்பியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x