Published : 26 Sep 2014 11:10 AM
Last Updated : 26 Sep 2014 11:10 AM
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பேசும் பிரதமர் நவாஸ் செரீப் காஷ்மீர் பிரச்சினை குறித்து நிச்சயம் பேசுவார் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
மேலும், இந்திய அரசு அழைப்பு விடுக்காதது வரையில் இந்தியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறாது என்றும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலாளர் அகமத் சவுத்ரி செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: 'ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பேசும் நவாஸ் செரீப் காஷ்மீர் பிரச்சினை குறித்து பேசுவதை தவிர்க்க வேண்டிய காரணம் இல்லை. வாக்கெடுப்பு நடத்தப்பட்டாலே காஷ்மீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என்பது பாகிஸ்தானின் நம்பிக்கை. தடைபட்ட இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை மீண்டும் நடைபெறச் செய்ய வேண்டிய பொறுப்பு இந்தியாவிடமே உள்ளது. இந்தியாதான் இருநாட்டு வெளியுறவுச் செயலர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையை ரத்து செய்தது. எனவே இந்தியாதான் அதை சீர்படுத்த வேண்டும்" என்றார்.
இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர்கள் மட்டத்தில் ஆகஸ்ட் 25–ம்தேதி நடத்த இருந்த பேச்சுவார்த்தையை இந்தியா திடீரென ரத்து செய்தது என்பது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT