Last Updated : 17 Feb, 2018 10:04 AM

 

Published : 17 Feb 2018 10:04 AM
Last Updated : 17 Feb 2018 10:04 AM

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 7.2 ஆக பதிவு

மெக்சிகோ நாட்டில் வெள்ளிக்கிழமை மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் ரிக்டரில் 7.2 ஆக பதிவானது.

இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், "மெக்சிகோ நிலநடுக்கம் முதலில் 7.5 ரிக்டர் எனக் கணக்கிடப்பட்டது. பின்னர் அது 7.2 ஆக கணக்கிடப்பட்டுள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

நிலநடுக்கம் ஆக்ஸாகா மாநிலத்திலிருந்து வடகிழக்கே பினோடேபா என்ற இடத்தில் மையம் கொண்டிருந்தது.

5 மாதங்களுக்கு முன்னதாக மெக்சிகோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 370 பேர் பலியாகினர். இந்நிலையில் தற்போது மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் விடிய விடிய சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x