Published : 17 Aug 2022 06:00 AM
Last Updated : 17 Aug 2022 06:00 AM

ஆக.17: இன்று என்ன? - இந்தோனேசியா சுதந்திர தினம்

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று இந்தோனேசியா. இந்தியாவை போல இந்தோனேசியாவை நோக்கி அந்நியர்கள் படையெடுக்க மசாலா பொருட்கள்தான் முக்கிய காரணமாக இருந்தது.

அந்த வகையில் 1605-ல் நெதர்லாந்தின் காலனி ஆதிக்கத்துக்குள் இந்தோனேசியா அகப்பட்டது. 350 ஆண்டுகள் இந்தோனேசியாவை நெதர்லாந்து ஆண்டது.

பிறகு 1942-ல் இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியர்கள் இந்தோனேசியாவை நோக்கி படையெடுத்தனர். இதன் மூலம் நெதர்லாந்திடமிருந்து விடிவு காலம் பிறக்கும் என்றே இந்தோனேசியர்கள் நம்பினர். ஆனால் ஜப்பானியர்கள் மிகவும் கொடூரமாக ஆதிக்கம் செலுத்தினர்.

இந்நிலையில் இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோற்றதை அடுத்து 1945-ம் ஆண்டு ஆகஸ்டு 17-ம் தேதி அன்று இந்தோனேசியா சுதந்திரம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x