Published : 05 Aug 2022 06:00 AM
Last Updated : 05 Aug 2022 06:00 AM

ஆக. 05: இன்று என்ன? - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட தினம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்த இந்திய அரசியல் சட்டப்பிரிவு 370 மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு பிரத்யேக சலுகைகள் வழங்கிய 35-ஏ ஆகியவை 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ம் தேதி அன்று நீக்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மாநிலமாக அதுவரை இருந்தது ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

இதை அடுத்து, சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31-ம் தேதி முதல் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை தனித்தனி யூனியன் பிரதேசங்களாக செயல்படும் என இந்திய அரசு 2019-ம் ஆண்டில் அறிவித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x