Published : 02 Jan 2023 08:08 AM
Last Updated : 02 Jan 2023 08:08 AM
மாணவர்கள் டெஸ்க் மேல் ஏறி நின்றனர். கும்மாளமும் சிரிப்பும். "இப்போது வகுப்பறை எப்படி தெரிகிறது என்று பாருங்கள்! நாம் பார்க்கும் கோணம் மாறும் போது நன்கு தெரிந்தது கூட வித்தியாசமாகத் தெரிகிறது. பார்வை மாறும் போது சிந்தனை மாறும். பானை செய்வதைப் பார்த்திருக்கீங்களா?" "பார்த்திருக்கோம் சார்". "சக்கரத்தில் வச்சு சுத்திச் சுத்தி செய்வாங்க." "ஆமாம். மனிதர்கள் சக்கரம் எப்படிக் கண்டுபிடிச்சாங்க என்பதே பெரிய கதை. வாசிச்சா ஆச்சரியமாக இருக்கும்."
"இப்போ பானைக்கு வருவோம். களிமண்ணால் பானை செய்யறாங்க. பானைக்கு உள்ளே தண்ணீரை ஊற்றிவைக்கிறோம். அந்த உட்பகுதி, வெற்றிடம்தான் பயன்படுது. உண்மையில் பானை என்ற பொருளின் வெற்றிடமே நமக்குப் பயன்படுகிறது." "சார், புரியல" என்றொரு குரல் எழுந்தது. "பானை என்பது மண்ணால் செய்யப்பட்ட உருவம். அதுக்கு உள்ளே காலியா இருக்கு. அதுக்குப் பெயர் பானை இல்லை. ஆனா அதில் தான் நாம எதையும் சேர்த்து வைக்கிறோம். விளிம்பும் வெற்றிடமும் சேர்ந்ததுதானே பானை" என்றேன். "ஆமாங்க சார்" என்றனர் பலர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT