Published : 27 Nov 2023 04:27 AM
Last Updated : 27 Nov 2023 04:27 AM
மொழித்திறன் கற்றலில் கவனித்தல், பேசுதல், படித்தல், எழுதுதல் என்ற நான்கு அடிப்படைத் திறன்களில் கடினமானதாகக் கருதுவது எழுதுதல் திறன் ஆகும். அதற்குக் காரணங்கள் பல. குழந்தைகளிடம் உள்ள வரையறுக்கப்பட்ட சொற்களஞ்சியம் அவர்களின் எண்ணங்கள் மற்றும் யோசனைகளைத் திறம்பட வெளிப்படுத்தச் சவாலாக இருக்கிறது. பல குழந்தைகள் எழுத்துப் பிழைகள் மற்றும் இலக்கண விதிகள் நினைத்து எழுதுவதற்குத் தயங்குகின்றனர். அதனால், ஒத்திசைவான வாக்கியங்கள் அல்லது பத்திகளை எழுத முயற்சிக்கும் போது குழந்தைகள் விரக்தியடைகின்றனர்.
மேலும், வகுப்பறையில் கொடுக்கப்படும் தலைப்புகள், குழந்தைகளின் எண்ணங்களை, யோசனைகளை ஒழுங்கமைக்க சவாலானதாக இருக்கின்றன. சுயமாக எழுதுவதில் கவனம் கொள்ளாமை மற்றும் அதற்கான முயற்சியில் ஈடுபடாமைகூட எழுது வதற்குச் சவாலாக அமையலாம். மொத்தத்தில் குழந்தைகள் சொந்தமாக எழுதும் திறன்களில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். தங்களின் எழுத்துத் திறமையில் நிச்சயமற்றவர்களாக உணரலாம். மேலும், ஆசிரியர்கள், சக குழந்தைகள், பெற்றோர்களின் விமர்சனத்திற்குப் பயப்படுவர்களாக இருக்கலாம். இவற்றை எல்லாம் களைந்து குழந்தைகளைச் சொந்தமாக எழுத வைக்க முடியும். நம்புங்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT