Last Updated : 20 Nov, 2023 04:31 AM

 

Published : 20 Nov 2023 04:31 AM
Last Updated : 20 Nov 2023 04:31 AM

ப்ரீமியம்
கழுகுக் கோட்டை 19: மாய மந்திரம் இன்றி காப்பாளனாக மாறிய செப்படி வித்தைக்காரன்

செப்படி வித்தைக்காரனான தத்தன் தனது கதையை சொல்லி முடித்ததும் அவன் மேல் குணபாலனுக்கு இரக்கம் பிறந்தது. அவன் தத்தனை நோக்கி, தத்தா, உனக்கு இப்படி நேர்ந்துவிட்டதே என்று நினைத்து வருந்தாதே. நமக்கு வரும் இன்பங்களைப் போலவே துன்பங்களையும், ‘எல்லாம் நன்மைக்கே’ என்று நினைத்துக் கடந்து சென்றுவிட வேண்டும். நமக்கு நடந்த துயரமான சம்பவத்தையே நினைத்துக்கொண்டு கவலையோடு வாழக் கூடாது. அப்படிச் செய்தால், நம்மால் ஓர் அளவுக்கு மேல் முன்னேறிச் செல்ல முடியாது.

மேலும் நாம் நமது செயல்களையும் சிந்தனையையும் வேறு திசையில் செலுத்தி விட்டால் நம்மை பாதித்த துயரங்களில் இருந்து மீண்டு வரலாம். நமக்குத் தேவையில்லாமல் ஏற்படும் மன அழுத்தத்தையும் தவிர்த்துவிடலாம் என்று பலவாறாக தத்தனுக்கு அறிவுரைகளை எடுத்துக் கூறினான் குணபாலன். அதைக் கேட்ட தத்தனும், அண்ணா, தாங்கள் யார் என்று கூட எனக்குத் தெரியாது. ஆனால், எங்கிருந்தோ வந்து எனக்கு இவ்வளவு ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கி உள்ளீர்கள். இதற்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை. மிகவும் நன்றி என்றான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x