Published : 03 Aug 2022 06:38 AM
Last Updated : 03 Aug 2022 06:38 AM

தென்மண்டல பெஞ்ச் பிரஸ் போட்டி: மதுரை பள்ளி மாணவி அனுஷ்ப்ரீத்தி முதலிடம்

தென்மண்டல அளவிலான பெஞ்ச் பிரஸ் போட்டியில் முதலிடம் பிடித்த மாணவி ஆர்.அனுஷ்ப்ரீத்தியை பள்ளியின், தலைமை ஆசிரியை பெ.இந்துமதி, உடற்கல்வி இயக்குநர் ச.வசந்தி, விளையாட்டு ஆசிரியை அ.உமா ஆகியோர் பாராட்டினர்.

மதுரை: தென்மண்டல அளவிலான பெஞ்ச் பிரஸ் போட்டியில் ஜூனியர் வலுதூக்கும் பிரிவில் மதுரை  மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர்.அனுஷ்ப்ரீத்தி முதலிடத்தை பிடித்தார்.

தென்தமிழ்நாடு அளவிலான பெஞ்ச் பிரஸ் ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டி மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில், ஜூனியர் வலுதூக்கும் பிரிவில் (45 கிலோ எடை பிரிவு) மதுரை தெப்பக்குளம்  மீனாட்சி சுந்த ரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் படிக்கும் வகுப்பு மாணவி அனுஷ்ப்ரீத்தி முதலிடம் பெற்றார்.

இணை ஆணையர் பாராட்டு

முதலிடம் வென்ற மாணவி அனுஷ்ப்ரீத்தியை பள்ளிக்குழுவின் தலைவரும், இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையருமான க.செல்லத்துரை, பள்ளியின் செயலரும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் துணை ஆணையருமான ஆ.அருணாசலம், பள்ளியின் தலைமை ஆசிரியை பெ.இந்துமதி, உடற்கல்வி இயக்குநர் ச.வசந்தி, விளையாட்டு ஆசிரியை அ.உமா மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x