Published : 19 Sep 2022 06:27 AM
Last Updated : 19 Sep 2022 06:27 AM
ஹசாரிபாக்: ஜார்கண்ட் மாநிலத்தில் பள்ளி வகுப்பறையில் மாணவர்களுடன் அமர்ந்து பாடத்தை கவனிக்கும் குரங்கு வீடியோ சமூக வலைத் தளத்தில் பரவி வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசுபள்ளியின் வகுப்பறை ஒன்றில் மாணவர்களோடு மாணவர்களாக ஒருகுரங்கு அமர்ந்து பாடத்தை கவனிக்கும் படம் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் நகரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் மாணவர்களுடன் அமர்ந்து ஆசிரியர் பாடம் நடத்துவதை குரங்கு ஒன்று கவனிக்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. மாணவர்கள் நிறைந்த வகுப்பறைக்குள் நுழையும் அந்த குரங்கு பின்வரிசையில் சாதாரணமாக அமர்க்கிறது. அதை பொருட்படுத்தாமல் அந்த வகுப்பு ஆசிரியர் பாடங்களை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் காட்சி வீடியோவில் உள்ளது.
அரசுப் பள்ளியில் மாணவர்களுடன் காட்டு லங்கூர் பாடம் படிக்கிறார் என்ற தலைப்பில் அந்த வீடியோ இடம் பெற்றுள்ளது. ஒரு வகுப்பில் முன்வரிசையில் குரங்கு அமர்ந்திருப்பது குறித்த புகைப்படமும் இணையதளத்தில் வெளியாகியது. ‘பள்ளியில் இணைந்த புதிய மாணவர்’ என்று நகைச்சுவையான குறிப்புடன் இந்தப்படம் வெளியாகி உள்ளது. ஜார்க்கண்ட் பள்ளியில் படிக்கும் மாணவர் தீபக் மகாதோ என்பவர் ட்விட்டரில் குரங்கின் வீடியோவையும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். முன்னதாக, சில மாதங்களுக்கு முன குரங்குகள் இணைந்துமொபைல் போனைப் பயன்படுத்தும் வீடியோ சமூக வலைதளங் களில் வெளியாகி 18 லட்சம் பார்வையாளர்களையும் ஆயிரக்கணக்கான விருப்பங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT