Published : 09 Sep 2022 06:04 AM
Last Updated : 09 Sep 2022 06:04 AM
சென்னை: அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி அன்று அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
அரசு பள்ளி மாணவர் களின் படிப்பை ஊக்குவிக்க வும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல்இடைநிற்றலை தவிர்கவும் காலை உணவு திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் 1,14,095 மாணவர்களுக்கு முதல் கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்துக்கு ரூ.33.56 கோடி செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் 15-ம்தேதி காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT