Published : 23 Oct 2019 09:16 AM
Last Updated : 23 Oct 2019 09:16 AM
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் மகாத்மா மழலையர்பள்ளியில் சமூகவியல் கல்வித்திருவிழா நடைபெற்றது. புதுக்கோட்டை பேலஸ்சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குக் கவிஞர்தங்கம் மூர்த்தி தலைமை வகித்தார். ரோட்டரி சங்கத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் வில்சன் ஆனந்த், ரோட்டரி துணை ஆளுநர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபாரதன், சங்கத் தலைவர் டி.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டாரக் கல்வி அலுவலர்கள் உமாதேவி, பி.துரைராஜ்,பேராசிரியர் சீதாலட்சுமி, கல்வியாளர்கள் பி.கருப்பையா, பாஸ்கரன், அனிஷ்ரகுமான், கருணாநிதி, நெப்போலியன், பேராசிரியர் கருப்பையா, பேலஸ்சிட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் செந்தில்குமார், முத்துசாமி, துரைமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கண்காட்சியில்,மண்பாண்டங்கள், பாரம்பரிய கட்டிடங்கள் மற்றும்சிற்பங்கள் போன்ற மாதிரிகள்என 150-க்கும் மேற்பட்டபடைப்புகளை மாணவ, மாணவிகள் காட்சிப்படுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT