Published : 15 Oct 2019 10:42 AM
Last Updated : 15 Oct 2019 10:42 AM
திருவனந்தபுரம்
கேரளா மாநில கல்வியறிவு பணி ஆணையம் சார்பில் அக்ஷராஸ்ரீ கல்வியறிவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மாநிலத்தின் கல்வியறிவு இல்லாதவர்களை கணக்கெடுத்து, அவர்களுக்கு கல்வியை கொடுக்கும் வகையில் ‘அக்ஷராஸ்ரீ’ கல்வி திட்டத்தை கேரளா அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், அக்ஷராஸ்ரீ கல்வி யறிவு தேர்வு, திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடந்தது. இந்த தேர்வில், மொத்தம் 2,050 பேர் கலந்துக் கொண்டு தேர்வு எழுதினர். அதில், 5 பேர் 80 வயதை தாண்டிய முதியவர்கள் என்று மாநில கல்வியறிவு பணி ஆணையம் கூறியுள்ளது.
அதாவது, சுமதி அம்மாள், தாரணி, கமலாம்மா, சுப்ரதம்மா ஆகிய 4 முதியவர்கள் 83 வயது என்றும் சாரதா என்பவருக்கு 82 வயது என்றும் மாநில கல்வியறிவு பணி ஆணையம் குறிப்பிட்டுள்ளது. அதேபோல், தஸ்லிமா என்ற 21 வயது இளம் பெண்ணும் இந்த தேர்வை எழுதினார்.
இந்த தேர்வானது, எழுத்து திறன், வாசிப்பு திறன் மற்றும் கணிதம் என 100 மதிப்பெண்ணுக்கு நடந்தது. இந்த தகவலை அறிந்த கேரளா இளைஞர்கள் கல்விக்கு வயது இல்லை என்று சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT