Published : 15 Oct 2019 07:47 AM
Last Updated : 15 Oct 2019 07:47 AM
திண்டுக்கல்
திண்டுக்கல் இலக்கியக்களம் சார்பில் திண்டுக்கல்லில் நவம்பர் 28-ம் தேதி முதல் டிசம்பர் 8-ம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது. இதற்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை தயார்படுத்தும் விதமாகவும், அவர்களின் பன்முகத்தன்மையை வளர்த்தெடுக்கவும், ஆண்டுதோறும் கவிதை, கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான போட்டிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல், வத்தலகுண்டு, பழநி, வேடசந்தூர் ஆகிய நான்கு கல்வி மாவட்டங்களில் நடத்தப்பட்டது. 6,7,8 வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவாகவும், 9,10 மாணவர்கள் ஒரு பிரிவாகவும், 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடத்தப்பட்டன.
திண்டுக்கல் நகரில் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் 1696 பேரும், வத்தலகுண்டு நகரில் இக் பாலியா உயர்நிலைப் பள்ளியில் 438 பேரும், பழநியில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 449 பேரும், வேடசந்தூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 284 மாணவ, மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர்.
பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழும், ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் புத்தகத் திருவிழாவில் வழங்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT