Published : 08 Oct 2019 05:04 PM
Last Updated : 08 Oct 2019 05:04 PM

பருவமழை அக். 3-வது வாரம் தொடங்குகிறது

சென்னை

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிந்தது. ஜூன் முதல் செப்டம்பர் வரை 4 மாதங்களில் 970 மீ.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 10 சதவீதம் அதிகம்.

தமிழகத்தில் மட்டும் 16 சதவீதம் கூடுத லாக மழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை தாக்கம் ஓய்ந்துவிட்டதை யடுத்து தற்போது ஈரப்பதம் குறைந்து வறண்ட காற்றின் தாக்கம் உயர்ந்துள்ளது.

இதனால் இனிவரும் நாட் களில் பரவலான மழைக்கு வாய்ப்புகள் குறைவுதான். வடகிழக்கு பருவமழை தொடங்கும் வரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

இந்நிலையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x