Published : 10 Aug 2021 03:15 AM
Last Updated : 10 Aug 2021 03:15 AM

அமைச்சர் பெயரில் போலியாக - மின்னஞ்சல் உருவாக்கி அவதூறு 7 பிரிவுகளில் வழக்கு பதிவு :

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின்பெயரில், அடையாளம் தெரியாத சிலர் போலி மின்னஞ்சல்முகவரியை உருவாக்கி, அதன்மூலம் இஸ்லாமியர்கள்பற்றி அவதூறான கருத்துகளை பதிவிட்டு வந்துள்ளனர். அதை பலருக்கு அனுப்பியும் உள்ளனர். இதையறிந்து அமைச்சர் அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து, அவதூறு பரப்பும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், போலி மின்னஞ்சலை நீக்கக் கோரியும் அமைச்சர் சார்பில் சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி மதம், இனம் அடிப்படையில் இரு பிரிவினர் இடையே பகைமையை தூண்டுதல், பொய்யான ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குபதிவு செய்துள்ள அபிராமபுரம் போலீஸார், இதில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x