Published : 10 Aug 2021 03:15 AM
Last Updated : 10 Aug 2021 03:15 AM

மின் ஊழியர்கள் வேலைநிறுத்தம் தள்ளிவைப்பு :

மின்சார சட்டத் திருத்த மசோதா,நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதைக் கண்டித்து ஆக.10-ம் தேதி (இன்று), நாடு முழுவதும் வேலைநிறுத்தம் செய்வதாக தேசிய மின்சார தொழிலாளர்கள், பொறியாளர்கள் கூட்டமைப்பு முடிவு செய்தது. அதன் அடிப்படையில், தமிழகத்திலும் இன்று வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கான ஆயத்தப் பணிகள் நடந்த நிலையில், மத்திய அரசு இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்று தெரிகிறது.

எனவே, இன்று நடத்த இருந்தவேலைநிறுத்தத்தை இப்போதைக்கு தள்ளிவைப்பது என்றும்,எந்த நாளில் மசோதா தாக்கல்செய்யப்படுகிறதோ அப்போதுவேலைநிறுத்தம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x