Published : 25 Jun 2021 03:12 AM
Last Updated : 25 Jun 2021 03:12 AM
சட்டப்பேரவை கூட்டம் தேதிகுறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.
16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, ஆளுநர் உரை மீதான விவாதத்தை ஜூன் 24-ம் தேதி வரை 3 நாட்களுக்கு நடத்த அலுவல் ஆய்வுக் குழுவில் முடிவு செய்யப்பட்டது.
முதல் நாளான 22-ம் தேதி, மறைந்த முன்னாள் பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. ஜூன் 23-ம் தேதியும் விவாதம் தொடர்ந்த நிலையில்,எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உரையாற்றினார்.
நிறைவு நாளான நேற்று காலை, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான தனது பதிலுரையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். பின்னர், சட்டத் திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவாக, சட்டப்பேரவை கூட்டத்தை ஒத்திவைப்பது தொடர்பான தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் கொண்டுவந்தார். இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்திவைப்பதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT