Published : 01 Jun 2021 03:12 AM
Last Updated : 01 Jun 2021 03:12 AM

சிறைபிடிக்கப்பட்ட தனுஷ்கோடி மீனவர்கள் 40 பேர் விடுவிப்பு :

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தனுஷ்கோடி நாட்டுப் படகு மீனவர்கள் 40 பேர்நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டனர்.

தனுஷ்கோடி சேராங்கோட்டை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சுமார் 25-க்கும் மேற்பட்ட இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளில், சுமார் 200-க்கும் மேற்பட்டமீனவர்கள் சனிக்கிழமை மாலைகடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.அந்த மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை தலைமன்னார் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 4 நாட்டுப் படகுகளைச் சிறைபிடித்து, அதில் இருந்த 40 மீனவர்களைக் கைது செய்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் தற்போது கரோனா பரவல் அதிகரித்துள்ளதால், கைது செய்யப்பட்ட மீனவர்கள், மீண்டும் இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்தால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்ற கடுமையான நிபந்தனையுடன் 40 மீனவர்களையும், அவர்களது நாட்டுப் படகுகளுடன் விடுவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x