Published : 01 Apr 2021 03:15 AM
Last Updated : 01 Apr 2021 03:15 AM

அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு முன்ஜாமீன் :

கோவில்பட்டி தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி விலக்கு அருகே மார்ச் 12-ல் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அத்தொகுதி வேட்பாளர் அமைச்சர் கடம்பூர் ராஜூவின் வாகனத்தையும் பறக்கும் படையினர் சோதனைக்காக நிறுத்தினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பறக்கும் படையினரை அமைச்சர் மிரட்டியதாகக் கூறப்பட்டது. இதையடுத்து அதிகாரியை மிரட்டியதாக அமைச்சர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு அமைச்சர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. தேர்தல் நேரத்தில் முன்ஜாமீன் வழங்க நிபந்தனை விதிக்க தேவை யில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அமைச்சர் கடம்பூர் ராஜூக்கு நிபந்தனையற்ற முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x