Published : 13 Feb 2021 03:10 AM
Last Updated : 13 Feb 2021 03:10 AM

வட தமிழக மாவட்டங்களில் குளிர் அதிகரிப்பு

சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையஇயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வரும் 16-ம் தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். தமிழக கடலோரப் பகுதிகளில் பகல் நேரத்தில் வடகிழக்கு திசையில் இருந்து காற்று வீசுகிறது. இரவில் வடமேற்கு திசையில் இருந்து குளிர்ந்த காற்று வீசுகிறது. இதன் காரணமாக வட தமிழகத்தின் மேற்குபகுதி மாவட்டங்களில் இரவு நேர வெப்பநிலை குறைந்து குளிர்அதிகரித்துள்ளது. 12-ம் தேதி காலை8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் குறைந்தபட்சமாக வால்பாறை, உதகையில் 5 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x