Published : 05 Jan 2021 08:22 AM
Last Updated : 05 Jan 2021 08:22 AM

கரோனா நோயாளி எண்ணிக்கை 8 ஆயிரத்துக்கும் கீழே குறைந்தது புதிதாக 838 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளது. புதிதாக 838 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 518, பெண்கள் 320 என மொத்தம் 838 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 229 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 21,550 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை சென்னையில் 2 லட்சத்து 20,072 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 1,414 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 267 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 985 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றனர். தமிழகம் முழுவதும் 7,970 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் முதியவர்கள் உட்பட 7 பேர், தனியார் மருத்துவமனைகளில் 3 பேர் என நேற்று 10 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,166 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 4,025 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 2 லட்சத்து 26,456, கோவையில் 52,649, செங்கல்பட்டில் 50,260, திருவள்ளூரில் 42,809 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது. 241 அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் இதுவரை 1 கோடியே 44 லட்சத்து 42,625 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 60,502 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x