Published : 15 Dec 2020 03:14 AM
Last Updated : 15 Dec 2020 03:14 AM

இலங்கை கடற்படையால் 27 மீனவர்கள் கைது

ராமேசுவரம்

ராமேசுவரத்தைச் சேர்ந்த 27 மீனவர்களை எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

கச்சத்தீவு கடற்பகுதியில் ராமேசுவரத்தைச் சேர்ந்த சுரேஷ், பெர்பக்ட், ஆரோக்கிய குருஸ், சிம்சன் ஆகியோருக்குச் சொந்தமான 4 விசைப் படகுகளையும் அதில் இருந்து 27 மீனவர்களையும் எல்லை தாண்டியக் குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கடற்படையினர் நேற்று மாலை கைது செய்தனர்.

இலங்கையில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மீனவர்களை விசாரணைக்கு பின் சிறையில் அடைக்காமல், தமிழகத்துக்குத் திருப்பி அனுப்பலாம் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x